கஜா புயல் - முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட அரசுக்கு கமல்ஹாசன் நன்றி

பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, கஜா புயல் தாக்குதலை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு மக்கள் நிதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-16 11:43 GMT
பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, கஜா புயல் தாக்குதலை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு மக்கள் நிதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார். அரசு அதிகாரிகள்,காவல் துறை அதிகாரிகள்,ஊடகங்கள்,தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி அடையாளத்தைத் தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்துகொண்டிருக்கும்  களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக்கொள்வதாகவும் கமல் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்