காதல் திருமணம் செய்த தம்பதி பாதுகாப்பு கேட்டு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்

ஒசூரில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி ஆனந்த் - பவித்ரா ஆகியோர் பாதுகாப்பு கேட்டு, ஒசூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

Update: 2018-11-09 06:02 GMT
ஒசூரில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி ஆனந்த் - பவித்ரா ஆகியோர் பாதுகாப்பு கேட்டு, ஒசூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  தஞ்சமடைந்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த ஆனந்த் - பவித்ரா இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் 31ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது குறித்து பேசிய அவர்கள், தங்களுடைய திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிப்பதாகவும், உறவினர்கள் சம்மதிக்காமல் மிரட்டி வருவதாகவும், இதற்கு உடந்தையாக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்