இரண்டரை வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை

போக்சோ சட்டத்தில் கைது - சிறையில் அடைப்பு

Update: 2018-11-08 00:15 GMT
ராஜபாளையத்தில் இரண்டரை வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தந்தையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இராஜபாளையம் வேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த நிறைபாண்டி என்பவர் 
தமது மகளை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, தாய் லட்சுமி இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நிறைபாண்டியை கைது செய்து, போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இராஜபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்