நடந்து சென்றவரிடம் 10 சவரன் தங்க நகை பறிப்பு : காயங்களுடன் பெண் மருத்துவமனையில் அனுமதி

திருச்சியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 10 சவரன் தங்க செயின் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-11-07 10:00 GMT
திருச்சியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 10 சவரன் தங்க செயின் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி டிஇஎல்சி குடியிருப்பில் வசித்து வரும் ராஜ்பெர்னான்டோ என்பவர், இன்று காலை தனது தங்கை சந்திரியாவுடன் ரயில்நிலையத்திற்கு சென்றுக்கொண்டிருந்தார்.  தலைமை தபால் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் சந்திரியா அணிந்திருந்த 10 சவரன் நகையை பறித்து சென்றுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சந்திரியா, காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்