சென்னை : உடலுறுப்பு தானம் செய்த புதுமண தம்பதி
சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கத்தில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மணமக்கள் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கத்தில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மணமக்கள் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளனர். திருமண விழா மேடையிலேயே, மணமக்கள் செல்வக்குமார் - சிவரஞ்சனி இருவருக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுமண தம்பதியின் இந்த செயலைக் கண்டு வியந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மனதார அவர்களை வாழ்த்தினர்.