நாகையில் மணமகனுக்கு சைக்கிள் சீதனம்...

நாகையில் பெட்ரோல் விலை உயர்வால் மணமகனுக்கு சைக்கிளை சீதனமாக வழங்கப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-11-04 10:07 GMT
நாகையில் பெட்ரோல் விலை உயர்வால் மணமகனுக்கு  சைக்கிளை சீதனமாக வழங்கப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குத்தாலம் அருகே உள்ள கோமல் கிராமத்தை சேர்ந்த ஜயப்பன் என்பவருக்கும் ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யாவிற்கும் இன்று கோமல் கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது பெட்ரோல் விலையால் எந்த அளவிற்கு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை எடுத்துரைக்கும் விதமாக மணமகனுக்கு பெண் வீட்டார் சிதனமாக சைக்கிள் வழங்கினர். இந்த நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்