பள்ளி ஆசிரியை கொலை வழக்கு : காதலன் திருச்சி சிறையில் அடைப்பு

பள்ளி ஆசிரியை கொலை வழக்கு : காதலன் திருச்சி சிறையில் அடைப்பு

Update: 2018-11-03 03:32 GMT
கும்பகோணம் பள்ளி ஆசிரியை  வசந்த பிரியா நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரின் காதலன் நந்தகுமாரை போலீஸார் கைது செய்தனர். இவர், வசந்தபிரியாவின் மாமா மகன் என்பதும், காதலித்த தன்னை திருமணம் செய்யாமல், வேறு ஒருவருடன் திருமணத்திற்கு நிச்சயம் செய்ததால் ஆத்திரத்தில் அவர் கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார், நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். நந்தகுமாரை, வரும் 16ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்