வடகிழக்கு பருவ மழை பெய்வதற்கான சாதகமான சூழல் உருவாகவில்லை - சென்னை வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவ மழை பெய்வதற்கான சாதகமான சூழல் தற்போது வரை உருவாகவில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2018-10-28 11:58 GMT
வடக்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றின் தாக்கம் அதிக இருக்கும் என்பதால் நாளை மற்றும் நாளை மறுநாள் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவ மழை பெய்வதற்கான  சாதகமான சூழல் தற்போது வரை உருவாகவில்லை என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்