தேசிய அளவிலான கார் பந்தயம் : சீறிப்பாய்ந்த கார்கள்
கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் பந்தயத்தில் பங்கேற்ற வீரர்களின் சாகசத்தை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் பந்தயத்தில் பங்கேற்ற வீரர்களின் சாகசத்தை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். ஜே.கே. டயர்ஸ் சார்பில் தேசிய அளவிலான கார் பந்தய போட்டியின் மூன்றாவது சுற்று கரி மோட்டார் விரைவு சாலை வளாகத்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து 76 வீரர்கள் பங்கேற்றனர். முன்னதாக நடைபெற்ற ஈரோ ஜே.கே.18 போட்டியின் இறுதியில் சென்னை வீரர் கார்த்திக் தரன்சிங் வெற்றி பெற்றார்.