"பாலாறு வெடிவிபத்தில் இறந்த உளவாளிகள் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்" - வீரப்பன் மனைவி
வீரப்பனை பிடிப்பதற்காக, காவல்துறையின் உளவாளியாக செயல்பட்ட சண்முக பிரியாவுக்கு, அரசு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கினால், பாலாறு பாலம் வெடிவிபத்தில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.
வீரப்பனை பிடிப்பதற்காக, காவல்துறையின் உளவாளியாக செயல்பட்ட சண்முக பிரியாவுக்கு, அரசு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கினால், பாலாறு பாலம் வெடிவிபத்தில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்துலட்சுமி, நிவாரணம் வழங்கவில்லை என்றால், 21 பேரின் உறவினர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.