ஓமலூரில் ஒரே நாளில் 5 பேரிடம் வழிப்பறி

சேலம் மாவட்டம் ஓமலூரில் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Update: 2018-10-08 07:53 GMT
சேலம் மாவட்டம் ஓமலூரில் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நேற்றிரவு மட்டும் ஐந்து பேரிடம் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள், மோட்டார் சைக்கிள், பணம், செல்போன், ஏ.டி.எம் கார்டுகள் போன்றவற்றை பறித்து சென்றுள்ளனர். ரோந்து போலீசாரின் அலட்சியமே, இதுபோன்ற தொடர் வழிப்பறி சம்பவங்களுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து இரவு நேர ரோந்தை தீவிரப்படுத்துமாறு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜோர்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்