20 வயது மாணவியை திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்காக ராமேஸ்வரம் வந்த 65 வயது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்

டியூஷன் படிக்க வந்த 20 வயது மாணவியை திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்காக ராமேஸ்வரம் வந்த 65 வயது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-09-26 15:17 GMT
டியூஷன் படிக்க வந்த 20 வயது மாணவியை திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்காக ராமேஸ்வரம் வந்த 65 வயது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம் அபோகர் என்ற பகுதியை சேர்ந்த 4 குழந்தைகளுக்கு தந்தையான ஜெய கிருஷ்ணன் என்பவர், மாணவி மகத்தை கடத்தி சென்று விட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. திருமணம் முடித்து விட்டு, தேனிலவுக்காக ராமேஸ்வரம் வந்த புதுமணத்தம்பதியை, செல்போன் சிக்னல் மூலம் போலீசார் பிடித்து, விசாரித்தனர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பஞ்சாப் போலீசிடம் மாணவியையும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரையும் ராமேஸ்வரம் போலீசார் ஒப்படைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்