ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ரூ.346 கோடி நிதி

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ஓராண்டில் மட்டும் 346 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Update: 2018-09-26 12:29 GMT
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ஓராண்டில் மட்டும் 346 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நுண்வழி அறுவை சிகிச்சை பிரிவு சார்பாக நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர் , இந்த மருத்துவமனையில்100 கோடி ரூபாய் செலவில் புறநோயாளிகளுக்காக 3வது டவர் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக கூறினார். மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசு எந்த வகையிலும் காலதாமதம் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்