5 மாத காலமாக குடிநீரின்றி தவிக்கும் மக்கள்...

திருவண்ணாமலை மாவட்டம் முனுக்கபட்டு கிராமத்தில் 5 மாதம் குடிநீர் வழங்காததை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-24 08:00 GMT
திருவண்ணாமலை மாவட்டம் முனுக்கபட்டு கிராமத்தில் 5 மாதம் குடிநீர் வழங்காததை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆரணி வாழபந்தல் சாலையில், ஒன்றுதிரண்ட கிராம மக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தை கலைக்க முற்பட்டபோது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தும், அதனை ஏற்க மறுத்து, தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்