தற்கொலைக்கு முயன்ற நிலானியின் மீது வழக்கு பதிவு..!
சின்னத்திரை நடிகை நிலானி மீது தற்கொலைக்கு முயன்றதாக மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகை நிலானியின் காதலன் காந்தி லலித்குமார் சில நாட்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால் காந்தி லலித்குமாரின் தற்கொலைக்கு தான் காரணமல்ல என நிலானி விளக்கம் அளித்திருந்தார். மேலும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் நிலானி சுமத்தியிருந்தார். இந்நிலையில் கடும் விரக்தியில் இருந்து நடிகை நிலானி, நேற்று முன் தினம் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
அவரை மீட்ட போலீசார், ராயப்பேட்டையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இந்நிலையில் தற்கொலைக்கு முயன்றதாக நிலானி மீது மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.