குரும்பர் இனமக்கள் ஒன்று கூடி நடத்திய கௌரம்மா திருவிழா

ஒசூர் அருகே தொட்டூர் மலைகிராமத்தில் குரும்பர் இனமக்கள் ஒன்றுகூடி கௌரம்மா திருவிழாவை நடத்தினர்.

Update: 2018-09-18 04:47 GMT
ஒசூர் அருகே தொட்டூர் மலைகிராமத்தில் குரும்பர் இனமக்கள் ஒன்றுகூடி கௌரம்மா திருவிழாவை நடத்தினர். திருவிழாவின் ஒரு பகுதியாக கிராமத்தின் மையப்பகுதியில் 45 அடி உயரமுள்ள கம்பு நட்டு அதில் தேங்காய் மற்றும் பணமுடிப்புகளை உச்சியில் கட்டி வழுக்குமரத்தின் மேல் ஏறி உறி அடிக்கும் நிகழ்ச்சியை நடத்தினர். இதில் ஏராளமான இளைஞர்கள் ஏறி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த திருவிழாவில் ஏழு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்