"செங்கோட்டை மோதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்க" - அர்ஜூன் சம்பத்

செங்கோட்டையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

Update: 2018-09-16 14:38 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் விநாயக் சிலை ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது. இதனை இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து, நூற்றுக்கும் விநாயகர் சிலைகள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு, மாமல்லப்புரம் கடலில் கரைக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்