ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை
ஈரோடு மாவட்டம் திருநகர் காலனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் திருநகர் காலனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கருங்கல்பாளையம் போலீசார் வங்கி அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். பல லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.