பாஜகவினர் சோபியாவையும் என் மனைவியையும் சட்டத்துக்கு புறம்பாக புகைப்படம் எடுத்திருக்கின்றனர் - சோபியாவின் தந்தை

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை மற்றும் பா.ஜ.க.வினர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, கைதான சோபியாவின் தந்தை சாமி, போலீஸில் புகார் அளித்துள்ளார்.

Update: 2018-09-04 10:56 GMT
* பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை மற்றும் பா.ஜ.க.வினர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, கைதான சோபியாவின் தந்தை சாமி, போலீஸில் புகார் அளித்துள்ளார். 

* தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அவர் அளித்துள்ள புகார் மனுவில், தமிழிசை பா.ஜ.க. தொண்டர்களை தூண்டி விட்டு தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறியுள்ளார். 

* அப்போது அவர்கள் தகாத வார்த்தைகளால் தங்களை திட்டியதாகவும்,   தனது மகளையும், மனைவியையும் சட்டத்துக்குப் புறம்பாக  அவர்கள் புகைப்படம் எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தங்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்திய தமிழிசை உள்ளிட்டோர்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் சோபியாவின் தந்தை கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்