போராட்டத்தையே தொழிலாக கொண்டிருக்கும் அமைப்புகளை மாணவர்கள் நம்பாதீர்கள் - ஏ.கே.​விஸ்வநாதன்

போராட்டங்களை சில அமைப்புகள் வியாபாரமாக்கி உள்ளதாக சென்னை பெரு மாநகர காவல் ஆணையர் ஏ.கே.​விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-31 06:22 GMT
போராட்டங்களை சில அமைப்புகள் வியாபாரமாக்கி உள்ளதாக சென்னை பெரு மாநகர காவல் ஆணையர் ஏ.கே.​விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற இறைவணக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்ள கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.

மாணவர்கள் தங்களுக்கு விருப்பமானவற்றில் அதிக அக்கறை செலுத்துவதோடு, குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி. பொருத்த தமது சார்பில் மக்களை சந்தித்து வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றும் ஏ.கே.​விஸ்வநாதன்  கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்