நோயாளிகள் பயணிக்க சொகுசு சிறப்பு பேருந்து : அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார்

நோயாளிகள் சிரமமின்றி பயணிப்பதற்காக தமிழக அரசு சார்பில் குளிர்சாதன வசதி, சிறப்பு படுக்கை மற்றும் இருக்கை வசதிகள் கொண்ட சொகுசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது

Update: 2018-08-27 09:28 GMT
நோயாளிகள் சிரமமின்றி பயணிப்பதற்காக தமிழக அரசு சார்பில் குளிர்சாதன வசதி, சிறப்பு படுக்கை மற்றும் இருக்கை வசதிகள் கொண்ட சொகுசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலே முதன்முறையாக கரூர் - கோவை வழித் தடத்தில் இந்த பேருந்து சேவை வழங்கப்படுகிறது. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேருந்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார். சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இந்த பேருந்து சேவை விரைவில் அனைத்து வழித்தடங்களிலும் வழங்கப்படவுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்