அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய விவகாரம் : ராமதாஸூக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு

காடுவெட்டி குரு மரணத்தின் போது அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட இழப்புகளை ராமதாஸிடம் பெறுவது குறித்த வழக்கில் நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-08-20 10:20 GMT
கடந்த மே மாதம் பாமகவை சேர்ந்த காடுவெட்டி குரு மரணமடைந்ததை தொடர்ந்து அக்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் 73 அரசுப் பேருந்துகள் சேதமடைந்தன. இந்த இழப்புகளை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸிடம் இருந்து பெற உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம். எம். சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸூக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்