மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி நீர் திறப்பு...

மேட்டூர் அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Update: 2018-08-17 13:18 GMT
மேட்டூர் அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. 16 கண் மதகுகள் வாயிலாக நுங்கும் நுரையுமாக அதிவேகத்தில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரின் அழகை காண ஏராளமான பொதுமக்கள் மேட்டூர் அணையில் குவிந்தனர் . பொதுவிடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குடும்பம் குடும்பமாக ஆயிரக்கணக்கான மக்கள் மேடூர் அணை பகுதிக்கு சென்றனர். இதனால் புதிய காவிரி பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. காவல்துறையினரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்