தாமிரபரணியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..!

தொடர்மழை காரணமாக குமரி மாவட்டத்தின் வயக்கல்லூர், பார்த்திவபுரம், திக்குறிச்சி, அதங்கோடு, மாராயபுரம் ஆகிய இடங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கிறது.

Update: 2018-08-16 05:13 GMT
இதனிடையே தொடர்மழை காரணமாக குமரி மாவட்டத்தின் வயக்கல்லூர், பார்த்திவபுரம், திக்குறிச்சி, அதங்கோடு, மாராயபுரம் ஆகிய இடங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடி, ஊருக்குள் புகுந்தது. 

இதனால் பாதிப்புக்குள்ளான பொதுமக்கள், பள்ளிக்கல், மங்காடு, உதச்சிகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் நேரில் பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்