மணல் திருட்டை தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சி : 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே காவல் உதவி ஆய்வாளரை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2018-08-12 04:31 GMT
தாமிரபரணி ஆற்றங்கரையோரம் மணல் திருட்டு நிகழ்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் காவல் உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் இன்னோஷ்குமார், சேரகுளம் தனிப்பிரிவு காவலர் சுதன் உள்ளிட்டோர் சோதனைக்காக சென்றனர். அப்போது எதிரே மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், லாரி ஓட்டுனர் போலீசார் மீது மோதியுள்ளார். இதில் காவல்துறை உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் தொடர்பாக, 2 பேரை கைது செய்த போலீசார், மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்