ரூ.4 லட்சம் மதிப்பிலான புகையிலை பறிமுதல்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட நான்கு லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-07-30 09:15 GMT
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட நான்கு லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள காட்ரோடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது திருவண்ணாமலையில் இருந்து கம்பத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலையை கடத்தி வந்த இருவரை கைது செய்தனர். கைதானவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்த சேர்ந்த கருப்பசாமி மற்றும் அஜய் குமார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்