ஜெயலலிதா மகள் என கூறி, அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்கள் போலி

ஜெயலலிதா மகள் என கூறி அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்...

Update: 2018-07-25 04:00 GMT
ஜெயலலிதாவின் மகள் என கூறி, வழக்கு தொடர்ந்த பெங்களுரு இளம்பெண் அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. அம்ருதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். ஜெயலலிதாவை சந்தித்ததற்கான ஓரு புகைப்பட ஆதாரங்களை கூட, அம்ருதாவால் தாக்கல் செய்ய முடியவில்லை என்றும் அரசு வழக்கறிஞர் வாதிட்டார். 


Tags:    

மேலும் செய்திகள்