காப்பகத்தில் மன வளர்ச்சி குன்றிய சிறுமி சித்ரவதை - 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமி சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக, காப்பக வார்டன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2018-07-22 11:56 GMT
ஆலங்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களுக்கான காப்பகத்தில், 17 வயது சிறுமி தங்க இசக்கி, உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், 4 நாட்களாக இருட்டறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமி சூடு வைத்து சித்ரவை செய்யப்பட்டதை கேள்விபட்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர். சிறுமியை கொடுமைப்படுத்திய காப்பக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்