தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க கோரிய உத்தரவுக்கு தடை

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கக் கோரிய உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Update: 2018-07-20 10:56 GMT
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொடர்ந்த வழக்கில், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  

உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு ஏற்புடையது அல்ல என்றும், இதனை அமல்படுத்தினால் ரேங்க் பட்டியலை முழுவதுமாக மாற்றி அமைக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 196 கருணை மதிப்பெண் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி டி.கே.ரங்கராஜனும் 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்