குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு அதிகரிப்பு - குடியரசுத்துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கவலை

குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்படுவது நாட்டில் அதிகரித்து வருவதாக குடியரசுத் துணை தலைவர் வெங்கைய்யா நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-07 10:33 GMT
* கண் அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறுகிறது.

* இந்த கருத்தரங்கை குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தொடங்கி வைத்து சிறந்த மருத்துவர்களுக்கான விருதினை வழங்கினார். 

* விழாவில் பேசிய அவர், நகர்புற குழந்தைகளிடம் காணப்பட்ட பார்வை குறைபாடு தற்போது கிராம புறங்களிலும் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்தார்.

* மக்களிடம் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறைக்கு மாறியதே இதற்கு காரணம் என குறிப்பிட்ட அவர்,  மீண்டும் பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.  

* விழாவில் அமைச்சர்கள் ஜெய்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்