டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்களுடன் கலந்துரையாடினார் மோடி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டுக் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

Update: 2021-07-13 14:12 GMT
ஜப்பானின் டோக்கியோ நகரில் வருகிற 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் 126 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 18 விதமான விளையாட்டுகளில் அவர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில், டோக்கியோ செல்லும் விளையாட்டுக் குழுவினருடன், பிரதமர் மோடி, காணொலி காட்சி வாயிலாக உரையாடினார். அப்போது, ஒட்டுமொத்த தேசமும் ஒலிம்பிக் வீரர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என, பிரதமர் உறுதி அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்