ஒலிம்பிக் போட்டி- பெரும்பாலானோர் எதிர்ப்பு

ஜப்பானில் கடந்த ஆண்டு நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டி, கொரோனா காரணமாக வரும் ஜுலை 23ல் தொடங்கவுள்ளது.

Update: 2021-02-08 07:41 GMT
ஜப்பானில் கடந்த ஆண்டு நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டி, கொரோனா காரணமாக வரும் ஜுலை 23ல் தொடங்கவுள்ளது. சமீபத்தில், இது குறித்து டோக்கியோவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், பெரும்பாலான ஜப்பானியர்கள், ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். கருத்துக்கணிப்பில்,61 சதவீதம் பேர், ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஒலிம்பிக்கை நடத்துவதற்கு, 36 சதவீதம் பொதுமக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்