ஆசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் 4 வது சுற்று- இந்திய வீர‌ர்கள் சேது ராஜீவ், அனீஷ் ஷெட்டி பங்கேற்பு

தாய்லாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை தொடர்ந்து ஆசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியின் நான்காவது சுற்று ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டையில் நடைபெற்று வருகிறது.

Update: 2018-08-04 11:48 GMT
ஆசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப்  போட்டியின் நான்காவது சுற்று, ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டையில் நடைபெற்று வருகிறது.இதில் இந்திய வீர‌ர்கள் சேதுராஜீவ், அனீஷ் ஷெட்டி உள்பட பல நாடுகளை சேர்ந்த 64 வீர‌ர்கள் பங்கேற்கின்றனர். 

முன்னதாக நடைபெற்ற மூன்று சுற்றுகளில் மலேசிய வீர‌ர் அஸ்மான் முதலிடத்தில் உள்ளார். வெறும் ஒரு புள்ளி பின்னடைந்து சைதி இரண்டாம் இடத்திலும், அவரை தொடர்ந்து இந்தோனேசிய வீர‌ர் திரிலக்‌ஷனா மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இதனால் போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனை தொடர்ந்து 5 ஆம் சுற்று இந்தோனேசியாவிலும், இறுதி சுற்று தாய்லாந்திலும் நடைபெற உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்