"100 நாள் வேலைவாய்ப்பு' தினக்கூலி உயர்வு - ராகுல் காந்தி கருத்து

Update: 2024-03-29 06:26 GMT

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான தினக்கூலியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் தினக்கூலியை 7 ரூபாய் உயர்த்தி இருப்பதாகவும், இவ்வளவு பெரும் பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என பிரதமர் உங்களிடம் கேட்க கூடும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி அரசு அமைந்த பிறகு 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கான தினக்கூலி

400 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்