பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து... வார்த்தை விட்டு வம்பில் சிக்கிய Ex CM... பொதுக்கூட்டத்தில் புகுந்து அலறவிட்ட பெண்கள் - கர்நாடக அரசியலில் பரபரப்பு

Update: 2024-04-16 11:34 GMT

கர்நாடகாவில், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் பொதுக்கூட்டத்தில் புகுந்து காங்கிரஸ் பெண் தொண்டர்கள் இருவர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸின் கிரகலட்சுமி திட்டத்தால் கர்நாடக பெண்கள் பாதை மாறிசெல்வதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி அண்மையில் கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும்எதிர்ப்பு தெரிவித்தநிலையில் நேற்று தும்கூர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரகூட்டத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடா, குமாரசாமி பங்கேற்றிருந்தனர். அப்போது குமாரசாமி கூறிய கருத்துக்கு எதிராக ஆட்சேபனை தெரிவித்து அங்கிருந்த காங்கிரஸ் பெண் தொண்டர்கள் கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்