திமுகவிற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு
சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானியில் நடைபெற்ற ஆதித்தமிழர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக வெற்றி பெற்றவுடன் அருந்தியர் சமுதாயத்திற்கு 6 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.