"அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா பதவி விலக வேண்டும்" - கி.வீரமணி

அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர்சூரப்பா, பதவி விலக வேண்டும் என்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-11-13 12:12 GMT
அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர்சூரப்பா, பதவி விலக வேண்டும் என்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். சூரப்பா மீது பல்வேறு புகார்களும், அதிகாரமீறல் குற்றச்சாட்டுகளும் கூறப்பட்ட நிலையில், அவர் மீது ஒரு நபர் விசாரணை குழுவை தமிழக அரசின் உயர் கல்வித் துறை அமைத்துள்ளது, வரவேற்கத்தக்கது என, தமது அறிக்கையில் கூறியுள்ளார். அவர் உடனடியாக பதவி விலகினால்தான், பாரபட்சமின்றி விசாரணை நடத்த வாய்ப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். சூரப்பா அந்தப்பதவியில் நீடித்தால், ஆவணங்கள் கூட 'மாயமாகி' விடக் கூடும் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்