பாஜக 2.0 - மோடி அரசு ஒராண்டு நிறைவு :''மக்கள் அளித்த ஆதரவு வெற்றிக்கு காரணம்'' - கடிதத்தில் மோடி உருக்கம்

வரலாற்றில் முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓராண்டில் வேகமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-30 05:55 GMT
பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்து இன்றுடன் ஒராண்டு  நிறைவடைகிறது. இதையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி, கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கடந்த ஒராண்டு காலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் உலக அளவில் இந்தியாவை முன்னோடி நாடாக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றும் வகையில் உள்ளதாக கூறியுள்ளார். விவசாயிகள் , தொழிலாளர்கள், சிறுதொழில் முனைவோர் என அனைவருக்கும் புதிய வாய்ப்புகளை தரும் காலகட்டமாகவும் இது இருக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்திய மக்கள் தம் மீது வைத்துள்ள அன்பு ,அதிக பலத்தை கொடுப்பதாகவும், அதன் மூலமே தன்னுடைய ஆட்சியை வெற்றிகரமாக செயல்படுத்த முடிவதாகவும் மோடி தெரிவித்துள்ளார். மக்கள் தம்முடன் ஒற்றுமையாக பயணித்து கொரோனா தாக்கத்தில் இருந்து நாடு மீள்வதற்கும் உறுதுணையாக உள்ளதாகவும், பிரதமர் மோடி தனது  கடித்தத்தில் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்