டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் : யார் டெல்லி கில்லி..?
டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் 90 கட்சிகள் போட்டி போடும் நிலையில், மக்கள் எந்த கட்சிக்கு மகுடம் சூட்டப் போகிறார்கள் என்பதே தற்போதைய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கு வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறகிறது.
தலைநகரின் தேர்தல் களத்தில் 90-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் குதித்துள்ளன.
ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மத்தியில் ஆளும் பா.ஜ.க., நாட்டை நீண்டநாட்களாக ஆட்சி செய்த காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இடையே பிரதானமாக போட்டி நிலவுகிறது.
பா.ஜ.க. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளும் இந்த தேர்தலில் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.
டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி மாநில கட்சியாகத்தான் உள்ளது.
தேர்தல் ஆணையத்தில், பதிவு செய்யப்பட்ட 290 க்கும் மேலான கட்சிகள் உள்ள நிலையில், அவற்றில் 85 கட்சிகள் இந்த தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ராஷ்டிரிய ஜனதா தளமும், பீகார் மாநிலத்தில் முக்கிய கட்சியாக உள்ள லோக் ஜனசக்தியும், தங்களுக்கு ஏற்கனவே தேர்தல் ஆணையம் கூறியுள்ள சின்னத்தை இந்த தேர்தலுக்கு ஒதுக்கித் தர கோரிக்கை வைத்துள்ளன.
மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில், 85 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் வாக்குகளை பிரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் இது மாதிரியான கட்சிகளுக்கு வெறும் நான்கு சதவீதம் வாக்குகள் தான் கிடைத்தன.
மக்களாட்சியில் மக்கள் தான் மன்னர்கள் என்பது அடிப்படை. அந்த வகையில், யாருக்கு மக்கள் முடிசூட்டப் போகிறார்கள் என்பது இன்னும் சில வாரங்களில் தெரியவரும்