டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் உறுதிமொழி அட்டை என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கையை முதல்வரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார்
அரவிந்த் கெஜ்ரிவாலின் உறுதிமொழி அட்டை என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கையை முதல்வரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார்
அதில் அடுத்த 5 ஆண்டுகளில் 24 மணி நேர மின்சார வினியோகம் செய்யப்படும்
200 யூனிட்டுகள் வரை மின் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது
ஒவ்வொரு வீட்டுக்கும் 24 மணிநேர தூய்மையான குடிநீர் வினியோகம் உறுதி செய்யப்படும்....
ஒவ்வொரு குடும்பத்துக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் திட்டம் தொடர்ந்து நீடிக்க செய்யப்படும்
டெல்லி அரசு பள்ளிகளில் தரமான கல்வியை உறுதி செய்து, ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்படும்....
மொஹல்லா கிளினிக்குகள் வாயிலாக தரமான, அருகாமை மருத்துவம் டெல்லி வாசிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்....
டெல்லியை மாசில்லா மாநகரமாக உருவாக்கப்படும். முதல் கட்டமாக தற்போது உள்ள காற்று மாசுவை மூன்று மடங்கு குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.