கங்கை நதி தூய்மை திட்டம் - பிரதமர் மோடி படகில் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சந்திரசேகர் ஆசாத் வேளாண்மை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி தலைமையில் கங்கை நதி மேலாண்மை தொடர்பான முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-12-14 12:12 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சந்திரசேகர் ஆசாத் வேளாண்ம , தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி தலைமையில் கங்கை நதி மேலாண்மை தொடர்பான முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத் மற்றும் உயர் அதிகாரிகள்  பலர் கலந்து கொண்டனர். பின்னர்  பிரதமர் மோடி கங்கை நதி தூய்மை திட்டம் தொடர்பாக படகில் சென்று நேரில்  பார்வையிட்டு ஆய்வு நடத்தினர், அப்போது அதிகாரிகளுடன் பிரதமர் கலந்தாலோசனை நடத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்