"கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை வழங்கிட வேண்டும்" - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை

தமிழகத்தில் மகாத்மா காந்தி பெயரிலான தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்த கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை உடனே வழங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-11-25 20:58 GMT
தமிழகத்தில் மகாத்மா காந்தி பெயரிலான தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்த கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை உடனே வழங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சில மாவட்டங்களில் கடந்த 4 மாதங்களாக வேலை செய்தவர்களின் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாமல், அலட்சியப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு, அவர் பெயரிலான மக்கள் நலத் திட்டத்தை மத்திய அரசு  புறக்கணிப்பது ஏற்புடையதன்று என்றும் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்