"ராமதாஸ் சொன்னதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்" - ஸ்டாலின்

பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் உள்ளதாக நிரூபித்தால், தாம் அரசியலை விட்டு விலகத் தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

Update: 2019-10-18 10:11 GMT
பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் உள்ளதாக நிரூபித்தால், தாம் அரசியலை விட்டு விலகத் தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். அசுரன் படம் பார்த்த ஸ்டாலின், பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன், படம் அல்ல பாடம் என  கூறியிருந்தார். இதுகுறித்து வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்துக்கான இடங்களை வழங்க தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஸ்டாலின், வழிவழியாக தனியாருக்கு பாத்தியப்பட்ட மனையில் முரசொலி அலுவலகம் இருப்பதாக நிலப் பட்டாவை வெளியிட்டுள்ளார். அதோடு, அந்த இடம் பஞ்சமி நிலம் என நிரூபித்தால், தாம் அரசியலை விட்டு விலக தயார் என்றும், இல்லாவிட்டால், ராமதாசும், அன்புமணியும் அரசியலைவிட்டு விலகத் தயாரா? எனவும் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்