"டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் உறுதி" - தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் அறிவிப்பு

டிசம்பர் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நிச்சயம் நடத்தி முடிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Update: 2019-10-17 19:16 GMT
டிசம்பர் இறுதிக்குள், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நிச்சயம் நடத்தி முடிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து, திறந்த வேனில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கொடுத்ததோடு, அதிமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டார்.  மேலும், உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள், இந்தாண்டு இறுதிக்குள் பதவி ஏற்பார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்