தி.மு.க. உறுப்பினருக்கு சபாநாயகர் கண்டனம்...

சட்டப்பேரவையில் விவாதத்தின்போது, அடிக்கடி குறுக்கிட்டு கவனத்தை திசை மாற்றும் செயல்களில் ஈடுபடுவதாக, திமுக உறுப்பினர் ரங்கநாதனுக்கு, சபாநாயகர் தனபால் கண்டனம் தெரிவித்தார்.

Update: 2019-07-09 10:29 GMT
சட்டப்பேரவையில் விவாதத்தின்போது, அடிக்கடி குறுக்கிட்டு கவனத்தை திசை மாற்றும் செயல்களில் ஈடுபடுவதாக, திமுக உறுப்பினர் ரங்கநாதனுக்கு, சபாநாயகர் தனபால் கண்டனம் தெரிவித்தார். பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு, இட ஒதுக்கீடு அளிப்பது குறித்த விவாதத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பேசி கொண்டிருக்கும்போது, திமுக உறுப்பினர் ரங்கநாதன் குறுக்கிட்டு பேசியதால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே, சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு, ரங்கநாதன் இதுபோன்ற செயல்களில் இனிமேல்  ஈடுபடக்கூடாது என்று கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்