குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட அதிகாரிகளின் மெத்தனமே காரணம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
போதிய அளவு தண்ணீர் உள்ள போதிலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட அதிகாரிகளின் மெத்தனமே காரணம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த கலந்தாய்வு கூட்டம் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதிய அளவு தண்ணீர் உள்ள போதிலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட அதிகாரிகளின் மெத்தனமே காரணம் என தெரிவித்தார்.