"தினகரன் உடன் கூட்டணி வைத்துள்ளவர்கள் அலுவலகத்தில் ஆயுதங்கள்" - தமிழிசை

தினகரனுடன் கூட்டணி வைத்துள்ளவர்களின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

Update: 2019-05-03 10:12 GMT
தினகரனுடன் கூட்டணி வைத்துள்ளவர்களின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார். ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள தூத்துக்குடிக்கு விமானம் மூலமாக வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தூத்துக்குடியில் வாக்கிங் டாக்கிங் போகும் ஸ்டாலின், துணை முதல்வராக இருந்த போது, தூத்துக்குடிக்கு ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என்று கூறும் ஸ்டாலின், கனவு உலகில் மிதந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்