"ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
"இரத்தினசபாபதி உள்ளிட்டோருக்கு அமமுகவில் பதவி"
ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஓட்டபிடாரம் இடைத்தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அறந்தாங்கி இரத்தின சபாபதி உள்ளிட்ட மூவருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.