இன்று தமிழகம் வருகிறார், மோடி : ஹெலிகாப்டர் வந்து இறங்கும் பணிக்கு ஒத்திகை

அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று இரவு தமிழகம் வருகிறார்.

Update: 2019-04-12 08:10 GMT
அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று இரவு தமிழகம் வருகிறார். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார். இதற்காக, சுமார் 70 ஏக்கர் பரப்பளவிலான திறந்த வெளியில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பொதுக்கூட்ட ஏற்பாடுகள், தமிழக துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்தின் நேரடி பார்வையில் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் வந்து தரையிறங்கும் வகையில் பொதுக்கூட்டம நடைபெறும் பகுதியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்களை இறக்கி நேற்று ஒத்திகை பார்க்கப்பட்டது. பிரதமர் மோடி வருகையை ஓட்டி ஆண்டிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகள் அனைத்தும் போலீசாரின் தீவிர கட்டுபாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்