அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அ.தி.மு.க. - பா.ம.க. அணி நிறைவேற்றும் - பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அ.தி.மு.க. - பா.ம.க. அணி நிறைவேற்றும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-19 23:28 GMT
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அ.தி.மு.க. - பா.ம.க. அணி நிறைவேற்றும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு, நிலுவை தொகையை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின்  நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே பா.ம.க. நிலைப்பாடு என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ்,  அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அ.தி.மு.க. அரசு  உறுதியளித்து உள்ளதாகவும் அறிக்கையில் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்